Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

ADDED : ஜூலை 03, 2024 09:41 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் வருவாய் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் உள்ள ஆரணி சார் - பதிவகத்தில் உள்ள இருளிப்பட்டு குக்கிராமத்தை, திருவள்ளூர் பதிவு மாவட்டம், பொன்னேரி சார் - பதிவகத்தில் உள்ள முதன்மை கிராமமான ஜகனாதபுரத்துடன் இணைக்கப்பட உள்ளது.

இந்த இணைப்பு குறித்து ஜகனாதபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் கருத்து கேட்கும் கூட்டம், வரும் 10ம் தேதி பகல் 11:00 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராமவாசிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us