/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பல்லாங்குழியான அதிவிரைவு சாலை செட்டிபேடு பகுதிவாசிகள் அவதி பல்லாங்குழியான அதிவிரைவு சாலை செட்டிபேடு பகுதிவாசிகள் அவதி
பல்லாங்குழியான அதிவிரைவு சாலை செட்டிபேடு பகுதிவாசிகள் அவதி
பல்லாங்குழியான அதிவிரைவு சாலை செட்டிபேடு பகுதிவாசிகள் அவதி
பல்லாங்குழியான அதிவிரைவு சாலை செட்டிபேடு பகுதிவாசிகள் அவதி
ADDED : ஜூன் 24, 2024 04:47 AM

தண்டலம்: சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிபேடு.
இப்பகுதியில் கடந்த 2014- ல் இச்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018-ம் ஆண்டின் இறுதியில் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
மாநில நெடுஞ்சாலைதுறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.
இதில் திருமழிசை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் வரை ஆறு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் தற்போது ஆங்காங்கே சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் செட்டிபேடு பகுதியில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்லாங்குழியாக மாறியுள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் செட்டிபேடு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார். இந்த ஊராட்சியில் திருப்பந்தியூர், பண்ணுார், சூசையபுரம், அந்தோணியார்புரம் என நான்கு குக்கிராமங்களில் ஒன்பது வார்டுகள் உள்ளன.
இந்த ஊராட்சிக்குட்பட்ட பண்ணுாரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் சாலை சேதமடைந்து பகுதிவாசிகள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதனால் பகுதிவாசிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.
குறிப்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அருகில் வி.ஏ.,ஓ., அலுவலகம் செல்லும் சாலை மிகவும் பரிதாபமாக உள்ளதால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.