ADDED : ஆக 06, 2024 10:42 PM
கும்மிடிப்பூண்டி:பொம்மாஜிகுளம் பகுதியில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுனர் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த ரோசய்யா, 25, என்பவரை கைது செய்தனர்.