/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம் வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம்
வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம்
வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம்
வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம்
ADDED : ஜூலை 22, 2024 05:50 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் அடுத்துள்ள முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரவீன்குமார், 19.
அப்பகுதியில் உள்ள தனியார் இரும்புக்கடையில் வேலை செய்து வந்த இவர் கடந்த 10ம் தேதி இரவு வீட்டிற்கு அருகில் உள்ள ஏரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் ரேவதி 12ம் தேதி கொடுத்த புகாரின் படி மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், பிரவீன்குமாருக்கும், அவரது நண்பர்களான கொப்பூர் காலனி யோகரத்தினம் என்ற அஜய், 26. குச்சிகாடு ரவி, 27, கொப்பூர் தமிழ், 21, சாரதி என்ற கோழி, 21, முருக்கஞ்சேரி கிருஷ்ணன், 27 மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய ஆறு பேருக்கும், டூ- வீலர் திருட்டு சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது.
இது தொடர்பாக அவர்கள் பிரவீன் குமாரை அழைத்து சென்று, கொலை செய்து கொப்பூர் முந்திரி தோப்பில் புதைத்தது தெரிந்தது.
இதையடுத்து நேற்று மணவாளநகர் போலீசார் உடலை தோண்டி எடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் ஆறு பேரையும் கைது செய்து கொலை எப்படி நடந்தது என, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.