/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊராட்சி தலைவரிடம் இருந்து 5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு ஊராட்சி தலைவரிடம் இருந்து 5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
ஊராட்சி தலைவரிடம் இருந்து 5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
ஊராட்சி தலைவரிடம் இருந்து 5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
ஊராட்சி தலைவரிடம் இருந்து 5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
ADDED : ஜூலை 08, 2024 06:15 AM
பெரியபாளையம் : பெரியபாளையம் அடுத்த ஏனம்பாக்கம் ஊராட்சியில், வண்டிப்பாதை நிலத்தை த.மா.கா., ஊராட்சி தலைவர் பாபு, துணைத்தலைவர் ப்ரீத்தி உள்ளிட்டோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய் துறையினருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி, 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தலைமையில் வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் 5 ஏக்கர் விவசாய நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாயாகும்.