/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 15, 2024 09:29 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 21ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதத்தில் மூன்றாவது வெள்ளிக் கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதனடிப்படையில் வரும் 21ல் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 150-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுனர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10-12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்று தனியார்துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.