Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா 560 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா 560 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா 560 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா 560 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ADDED : ஜூலை 27, 2024 07:18 AM


Google News
திருத்தணி, : திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை, ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா துவங்குகிறது.

அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் காவடிகளுடன் வந்து காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு காவடிகள் செலுத்தி வழிப்படுவர்.

இன்று ஆடி அஸ்வினி, நாளை ஆடிப்பரணி, நாளை மறுதினம் ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், 30ம் தேதி இரண்டாவது நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

இன்று காலை, 6:00 மணி முதல், வரும் 30ம் தேதி இரவு, 10:30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்கள், 24 மணி நேரமும் மூலவரை தரிசனம் செய்யலாம்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், இன்று முதல், 31ம் தேதி வரை ஐந்து சிறப்பு மின்சார ரயில்கள் சென்னையில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதாவது, வேலுார் - 80, அரக்கோணம் - 62, காஞ்சிபுரம் - 35, திருப்பத்துார் - 35, குடியாத்தம் - 30, ஆரணி - 30, திருப்பதி - 20, சென்னை - 25, திருவண்ணாமலை - 15 பஸ்கள் என, திருத்தணிக்கு, 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர சென்னையில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதிக்கு, 30 பேருந்துகளும், காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதிக்கு, 20 பேருந்துகள், சித்துார், திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர் என, மொத்தம் 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us