/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை
ADDED : ஜூன் 03, 2024 04:37 AM
திருத்தணி: திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன், 38; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த மாதம் 28ம் தேதி வேலை முடித்து விட்டு, அரக்கோணத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி திருத்தணிக்கு பயணம் செய்தார்.
திருத்தணி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் போது, அதே பேருந்தில் பயணம் செய்த திருத்தணி ஜோதி நகரைச் சேர்ந்த கார்த்திக், 24, அலெக்ஸ், 25, ஆகியோர் வழிவிடுமாறு கவியரசனிடம் தகராறு செய்தனர்.
பின், தன் இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றவரை கார்த்திக், அலெக்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கினர். பலத்த காயமடைந்த கவியரசன், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக், அலெக்ஸை தேடி வருகின்றனர்.