/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கழிவுநீர் பிரச்னையில் கழுத்தறுத்து கொலை கழிவுநீர் பிரச்னையில் கழுத்தறுத்து கொலை
கழிவுநீர் பிரச்னையில் கழுத்தறுத்து கொலை
கழிவுநீர் பிரச்னையில் கழுத்தறுத்து கொலை
கழிவுநீர் பிரச்னையில் கழுத்தறுத்து கொலை
ADDED : ஜூலை 28, 2024 01:47 AM

திருத்தணி:திருத்தணி சுப்பராயன் மேஸ்திரி தெருவில் வசிப்பவர் பூபதி, 54. இவர் லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திகேயன், 45.
நேற்று முன்தினம் இரவு, கார்த்திகேயன் தன் வீட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் வடிகால்வாய் வழியாக செல்வதற்கு, கார்த்திகேயன் வீட்டில் வடிகால் சரியாக இல்லாதது காரணம் என, தகராறு செய்துள்ளார்.
ஆத்திரமடைந்த பூபதி வீட்டில் இருந்த, ஆக் ஷா பிளேடால் கார்த்திகேயனின் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் அறுத்தார். கார்த்திகேயன், உயிரிழந்தார். போலீசார் பூபதியை கைது செய்தனர்.