Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இரவில் சாலை மறியலில் ஈடுபடும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பீதி

இரவில் சாலை மறியலில் ஈடுபடும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பீதி

இரவில் சாலை மறியலில் ஈடுபடும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பீதி

இரவில் சாலை மறியலில் ஈடுபடும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பீதி

ADDED : ஜூலை 05, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், இரவு நேரங்களில் சாலையில் திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகளுக்கு பீதியடைந்துள்ளனர்.

கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும், 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை என, பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.

திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூருக்கு தினமும் ஏராளமானோர் பணிநிமித்தமாக சென்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சின்னகளக்காட்டூர் பகுதியில், இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் கால்நடைகள் ஜாலியாக உலா வருகின்றன. இந்த கால்நடைகள், சாலையின் நடுவே ஓய்வெடுக்கிறது.

திடீரென எழுந்து, சாலையின் குறுக்கே வரும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், நான்கு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், அவ்வப்போது கால்நடைகளால் விபத்திற்குள்ளாகி, அவற்றில் பயணம் செய்வோர் காயமடைந்து விடுகின்றனர். இதுபோன்ற விபத்து சம்பவங்கள், இச்சாலையில் அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர்.

எனவே, சாலையில் உலா வரும் கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us