Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

ADDED : ஜூலை 18, 2024 03:17 PM


Google News
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முருக்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 34.

லாரி ஓட்டுனர். கடந்த 16ம் தேதி இவர் ஆந்திராவிலிருந்து லாரியில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நேற்று முனதினம் அதிகாலை 4:00 மணியளவில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் திருப்பாச்சூர் அருகே வந்த போது துாக்கம் வரவே அப்பகுதியில் உள்ள புறவழிச்சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு மொபைல் போனை சார்ஜரில் போட்டு விட்டு துாங்கி விட்டார்.

பின் காலை 5:30 மணியளவில் எழுந்து பார்த்த போது மொபைல்போன் மாயமானது தெரிய வந்தது.

இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் அந்த மொபைல் போனை திருடியது திருப்பாச்சூர் பெரிய காலனியைச் சேர்ந்த செல்வகுமார், 34 என தெரிந்தது. போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us