Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயிலில் அடிபட்டு கொத்தனார் பலி

ரயிலில் அடிபட்டு கொத்தனார் பலி

ரயிலில் அடிபட்டு கொத்தனார் பலி

ரயிலில் அடிபட்டு கொத்தனார் பலி

ADDED : ஜூலை 31, 2024 09:45 PM


Google News
ஆவடி:கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மாதவன், 50. இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக, சில மாதங்களுக்கு முன் அவரது மனைவி கோபித்துக் கொண்டு, சொந்த ஊரான மகள் மற்றும் மகனுடன் ஆந்திர மாநிலம் சென்றனர்.

மாதவன், ஆவடி அடுத்த வேப்பம்பட்டில் உள்ள தம்பி ஜெயராம் வீட்டில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் ஆவடி ரயில் நிலையத்தில், முதல் நடைமேடையில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஆவடி ரயில் நிலையத்தில், 'எல்.சி., கேட் 2' அருகே ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

விசாரணையில், அண்ணனுார் ஷெட்டில் இருந்து ஆவடி வந்த ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.

ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us