Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது

நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது

நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது

நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது

ADDED : ஜூலை 17, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், நடிகை கவுதமிக்கு சொந்தமான, பல ஏக்கர் நிலம் இருந்தது. இதை விற்க, சென்னையைச் சேர்ந்த அழகப்பன், 64, என்பவருக்கு, கவுதமி 'பவர்' பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

இந்நிலையில், கவுதமியின் சொத்துக்களை மோசடியாக விற்பனை செய்து, 25 கோடி ரூபாய் ஏமாற்றியதாக அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் உள்ளிட்ட ஐந்து பேர், ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின், ஜாமினில் வெளிவந்த அழகப்பன் தலைமறைவானார்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் கவுதமியின் அண்ணன் ஸ்ரீகாந்த் என்பவரின் சொத்தையும் அழகப்பன் மோசடி செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், தன் அண்ணன் சார்பில் கவுதமி, கடந்த மே மாதம் புகார் அளித்தார்.

புகாரில், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில், என் அண்ணனுக்கு சேர வேண்டிய 1.26 ஏக்கர் நிலம் இருந்தது.

இதை விற்க, கடந்த 2015ல் அழகப்பனுக்கு அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தார். அந்த நிலத்தை, 60 லட்சம் ரூபாய்க்கு விற்ற அழகப்பன், பணத்தை தரவில்லை. சில மாதங்கள் கழித்து, இதே நிலத்தை, 1.63 கோடி ரூபாய்க்கு, கூட்டாளி ரகுநாதன் என்பவருக்கு அழகப்பன் விற்றுள்ளார்.

இதில், தொடர்புள்ள அழகப்பன், ரகுநாதன், சுகுமார் ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மேற்கண்ட மூவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், அழகப்பனை நேற்று கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us