Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையோரம் கனரக வாகனங்கள் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

சாலையோரம் கனரக வாகனங்கள் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

சாலையோரம் கனரக வாகனங்கள் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

சாலையோரம் கனரக வாகனங்கள் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

ADDED : ஜூன் 05, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், ரயில் மேம்பாலமும், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடம், எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் முக்கிய சந்திப்பாக உள்ளது.

தற்போது, அந்த இடம் வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்' பகுதியாக மாறி வருகிறது. இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரத்திலும், ஏராளமான கனரக வாகனங்கள் அங்குள்ள பெரும் பகுதி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

இதனால், அந்த சந்திப்பில், மூன்று திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் அப்பகுதியில் திக்குமுக்காடி போகின்றன. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம், விபத்து அபாயம் மறுபுறம் என்ற ஆபத்தான சூழல் நிலவுகிறது.

அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க, நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், தேசிய நெடுஞ்சாலை ரோந்து படையினரும் தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us