/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நலவாழ்வு மையம் 'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நலவாழ்வு மையம்
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நலவாழ்வு மையம்
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நலவாழ்வு மையம்
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நலவாழ்வு மையம்
ADDED : ஜூலை 25, 2024 12:10 AM

திருவள்ளூர்:திருமழிசை அடுத்த மேல்மணம்பேடு பகுதியில், துணை சுகாதார நிலையம் எனும் நலவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தை பகுதிவாசிகள் தங்கள் அடிப்படை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நலவாழ்வு மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், தற்போது கனரக வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. இதனால், நலவாழ்வு மையத்திற்கு வருவோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் 'குடி'மகன்களின் கூடாரமாகவும் மாறி விடுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நலவாழ்வு மையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டவும், கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.