Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரூ.2,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'காப்பு'

ரூ.2,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'காப்பு'

ரூ.2,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'காப்பு'

ரூ.2,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'காப்பு'

ADDED : ஜூலை 05, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:மத்திய அரசு திட்டத்தில் மானியம் கொடுக்க, 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு, மாவட்ட தொழில் மையம் வாயிலாக, மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தில், தொழில் துவக்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி, 45, என்பவர், அப்பகுதியில் புத்தக கடை நடத்தி வருகிறார். கடையை விரிவுபடுத்த 2022ல் மாவட்ட தொழில் மையத்தை அணுகி, மத்திய அரசு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாயை கடனாக பெற்றார்.

மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும், 50,000 ரூபாய் மானியத்தை பெற, ஓராண்டுக்கும் மேலாக மாவட்ட தொழில் மையத்தை அணுகியுள்ளார்.

ஆனால், மானியத்தை கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மானிய தொகை வேண்டுமென்றால், 2,500 ரூபாய் வேண்டும் என, மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவகுமார், 47, கேட்டுள்ளார்.

இதனால், மன உளைச்சல் அடைந்த குமாரசாமி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமாரிடம் 2,500 ரூபாயை குமாரசாமி கொடுத்தார்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார், சிவகுமாரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us