Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி

டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி

டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி

டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி

ADDED : ஜூன் 27, 2024 12:34 AM


Google News
திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி காலனியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 45. இவர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் சக்கரபாணி தன் இருசக்கர வாகனத்தில் திருத்தணியில் இருந்து பொன்பாடி காலனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த சக்கரபாணியை மீட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us