ADDED : ஜூன் 18, 2024 09:45 PM
பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, குறுவாயல் கிராமத்தில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் இருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
குறுவாயல் கிராமத்தைச் சேர்ந்த வேலன், 20, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.