/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருமழிசை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 17ல் கொடியேற்றம் திருமழிசை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 17ல் கொடியேற்றம்
திருமழிசை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 17ல் கொடியேற்றம்
திருமழிசை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 17ல் கொடியேற்றம்
திருமழிசை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 17ல் கொடியேற்றம்
ADDED : ஜூன் 11, 2024 04:57 AM
திருவள்ளூர்: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில்.
இங்கு இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும். மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வரும் 19ம் தேதி காலையிலும், தேர்த்திருவிழா வரும் 23ம் தேதி காலை நடைபெறும். வரும் 25ம் தேதி மாலை பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.