Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெரியபாளையம் கோவிலில் முதல்கால யாக பூஜை துவக்கம்

பெரியபாளையம் கோவிலில் முதல்கால யாக பூஜை துவக்கம்

பெரியபாளையம் கோவிலில் முதல்கால யாக பூஜை துவக்கம்

பெரியபாளையம் கோவிலில் முதல்கால யாக பூஜை துவக்கம்

ADDED : ஜூலை 11, 2024 01:02 AM


Google News
பெரியபாளையம்:பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் நாளை கும்பாபிேஷக விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை துவங்கியது. கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், லட்சுமி ேஹாமம், தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை நடந்தது.

இன்று காலை, 8:30 மணிக்கு இரண்டாம்கால யாக பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம், சதுர்வேத பாராயணம், மாலை, 3:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, ேஹாமம், தத்துவார்ச்சனை நடக்கிறது.

நாளை காலை, 4:00 மணிக்கு அவபிரதயாகம், யாக பூஜை, பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு நடக்கிறது.

காலை, 6:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடைபெறும். 10:00 மணிக்கு பவானி அம்மனுக்கு மகா அபிேஷகம், தீபாராதனையும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வினாயகர், பவானி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

விழாவையொட்டி, மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் நேற்று கோவில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம்கள் எங்கு அமைப்பது, பெண்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசலில் சிக்கும் கர்ப்பிணியர்களை மீட்பது குறித்த ஆய்வு மேற்கொண்டார். வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us