ADDED : ஜூலை 09, 2024 06:22 AM
திருவள்ளூர்: உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ், திருத்தணியில் வரும் 24ல் கலெக்டர் தலைமையில் சிறப்பு முகாம் நடக்கிறது.
மக்கள் குறைகளை கேட்டு, உடனே தீர்வு காண, 'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டத்தின் கீழ், இந்த மாதம் திருத்தணி தாலுகா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டம் மற்றும் சேவைகள் மக்களை சென்றடையும் வகையில் முகாம் நடத்த உள்ளார்.
இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.