Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 05, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தில், இயற்கை உரம் மற்றும் மண்புழு தயாரிக்க, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாயிலாக, 2017 -- 18ம் ஆண்டு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வந்தது.

அதன் வாயிலாக, கணேசபுரத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைந்தனர். இந்நிலையில், கொரோனாவுக்கு பின் இந்த உரக்கிடங்கு பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது. இதனால், மண்புழு உரம் தயாரிக்கும் இடம் பாழடைந்து உள்ளது.

தற்போதைய பருவத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மீண்டும் மண்புழு இயற்கை உரம் தயாரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் வாயிலாக, இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us