ADDED : ஜூலை 10, 2024 12:13 AM
திருத்தணி:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 65. இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மத்துார் ரயில்வே கேட் பகுதியில் அறை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
ரயில்வே துறையில் சப்-- காண்ட்ராக்டர் பணிகள் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, முனுசாமி குளிப்பதற்காக அருகே உள்ள மின்மோட்டரை இயக்குவதற்கு, மின்ஒயர் எடுத்து பிளக்கில் நுழைப்பதற்கு முயன்ற போது, மின்சாரம் தாக்கி இறந்தார்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.