Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறுவாபுரி கோவில் குளம் பணி மந்த கதியில் நடப்பதால் அதிருப்தி

சிறுவாபுரி கோவில் குளம் பணி மந்த கதியில் நடப்பதால் அதிருப்தி

சிறுவாபுரி கோவில் குளம் பணி மந்த கதியில் நடப்பதால் அதிருப்தி

சிறுவாபுரி கோவில் குளம் பணி மந்த கதியில் நடப்பதால் அதிருப்தி

ADDED : ஆக 07, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் பரந்து விரிந்து காணப்படும் குளம், வரலாற்று சிறப்பு மிக்க குளமாகும்.

அந்த குளத்தை சீரமைக்க வேண்டும் பல ஆண்டு காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், குளத்தை சீரமைக்கும் பணிகளுக்காக, 3.14 கோடி நிதி ஒதுக்கி, காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால் புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் பணிகள் துவங்கப்பட்டன.

குளத்தை ஆழப்படுத்தி, குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் நிறுவி படித்துறை அமைத்து, குளத்தை சுற்றி நடைபாதை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விறுவிறு என துவங்கப்பட்ட பணிகள், இடம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் முடங்கியது.

அதற்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் இரு மாதங்களுக்கு முன் மீண்டும் பணிகள் துவங்கப்பட்டன. இருப்பினும் மந்த கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் புதுப்பிப்பு பணிகளில் இழுபறி நீடிக்கிறது.

இதனால் சிறுவாபுரி பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us