Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வாகனங்கள் நிறுத்துவதில் கடும் சிரமம் சிறுவாபுரி வரும் பக்தர்கள் தவிப்பு

வாகனங்கள் நிறுத்துவதில் கடும் சிரமம் சிறுவாபுரி வரும் பக்தர்கள் தவிப்பு

வாகனங்கள் நிறுத்துவதில் கடும் சிரமம் சிறுவாபுரி வரும் பக்தர்கள் தவிப்பு

வாகனங்கள் நிறுத்துவதில் கடும் சிரமம் சிறுவாபுரி வரும் பக்தர்கள் தவிப்பு

ADDED : ஜூன் 18, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.

அங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் சவாலாக, கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

பக்தர்கள் புலம்பல்


வரிசையில் நின்று சிறுவாபுரி முருகனை தரிசிக்கும் நேரத்தை விட, கோவில் வெளிபுறத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட அதிக நேரம் ஆகிறது என பக்தர்கள் புலம்பினர்.

அதற்கு தீர்வு காணும் விதமாக, செவ்வாய் மற்றும் விேஷச நாட்களில், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அடுத்த புதுரோடு சந்திப்பில் உள்ள இணைப்பு சாலையில் தடுப்பு அமைத்து டூ -- வீலர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள், அந்த இணைப்பு சாலையின் இரு புறத்தில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன.

இணைப்பு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகனங்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது.

அதிருப்தி


அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு, மினி பேருந்து வாயிலாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

சிறுவாபுரி பக்தர்களுக்காக, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில், 10 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த மாற்று ஏற்பாட்டினால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், 'சிறுவாபுரி முழுதும் சாலையின் இரு புறுத்திலும் ஆக்கிரமிப்பு கடைகளும், கோவிலை ஒட்டிய பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு காய்கறி கடைகளும் இயங்கி வருகின்றன.

'ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாற்று இடம் கொடுத்து, சாலையை விரிப்படுத்த வேண்டும். கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் போதிய அளவில் பார்க்கிங் வளாகம் ஏற்படுத்தினால் பக்தர்கள் சிரமமின்றி கோவில் வந்து செல்ல வழி வகுக்கும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us