Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் புகார் மனு

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் புகார் மனு

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் புகார் மனு

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் புகார் மனு

ADDED : ஜூலை 31, 2024 10:43 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே குருவராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது, பில்லாக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில், சர்வே எண்: 1036ல், 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் உள்ளன.

இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, தைல மரங்கள் வைத்திருப்பதாகவும், இது தொடர்பாக வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக, நுாறு நாள் வேலை பார்க்கும் பில்லாக்குப்பம் கிராம பெண்கள், 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வருவாய் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை மீட்க வேண்டும். அந்த இடத்தில் நுாறு நாள் வேலை வழங்க வேண்டும் என, கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us