/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 10, 2024 08:56 PM
திருவள்ளூர்:தமிழகத்தில் வீர சாகசம் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வாயிலாக, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்கப்பட உள்ளது. விருதுக்கு தேர்வு செய்வோருக்கு பதக்கத்துடன் 5 லட்சம் ரூபாய் காசோலை, பாராட்டு சான்றிதழ் சுதந்திர தினவிழாவில் முதல்வர் வழங்குவார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை பெண்கள், https://www.awards.tn.gov.in/- என்ற இணையதளத்தில் வரும், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல் பெற, கலெக்டர் அலுவலகத்தின் 2வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.