Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 9வது மாடியில் இருந்து விழுந்த பிளம்பர் பலி

9வது மாடியில் இருந்து விழுந்த பிளம்பர் பலி

9வது மாடியில் இருந்து விழுந்த பிளம்பர் பலி

9வது மாடியில் இருந்து விழுந்த பிளம்பர் பலி

ADDED : ஜூலை 15, 2024 11:22 PM


Google News
ஸ்ரீபெரும்புதுார்: செங்கல்பட்டு மாவட்டம், குண்ணவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; பிளம்பர். இவர், ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் சிப்காட் நிறுவனத்தின்கீழ் கட்டப்பட்டு வரும்தொழிலாளர் தங்கும் விடுதியில், பிளம்பராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை 9வது மாடியில் வேலைசெய்து கொண்டிருந்த மணிகண்டன், எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியே, தவறி கீழே விழுந்தார்.

இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஒரகடம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us