Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

ADDED : ஜூலை 13, 2024 08:02 PM


Google News
கும்மிடிப்பூண்டி:செங்குன்றம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் மனைவி காயத்ரி, 44.

கணவருடன் செங்குன்றத்தில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி ராயல் என்பீல்ட் புல்லட்டில் சென்றார். சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அடுத்த பெரவள்ளூர் அருகே செல்லும் போது காயத்ரி அணிந்திருந்த துப்பட்டா, அவர் பயணித்த டூ-- வீலரின் சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, அதே திசையில் சென்ற லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், அதே இடத்தில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us