Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு

பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு

பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு

பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு

ADDED : ஜூலை 21, 2024 06:46 AM


Google News
ஊத்துக்கோட்டை: திருவாலங்காடு, ராமலிங்காபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாப்புலம்மா, 75. நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

நேற்று மாலை, ஊத்துக்கோட்டை வந்துள்ளார். அங்கு திருவள்ளூர் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.

இரவு, 8:00 மணிக்கு திருவள்ளூர் செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இருக்கையில் அமர்ந்த பின் தான் கையில் கொண்டு வந்த பையில் இருந்த, 4 சவரன் செயின், 3 சவரன் வளையல், அரை சவரன் மோதிரம் ஆகியவை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகை காணவில்லை என கூச்சலிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us