Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பூதுாரில் 50 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

பூதுாரில் 50 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

பூதுாரில் 50 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

பூதுாரில் 50 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

ADDED : ஜூலை 02, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
சோழவரம்: சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, அங்கு வீட்டு மனைகளை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது.

நேற்று வீட்டுமனை அமையும் இடத்தின் அருகில், கரை புறம்போக்கு என்ற வகைப்பாட்டில் உள்ள அரசு நிலத்தில் இருந்த, 50க்கும் அதிகமான பனை மரங்கள் ஜே.சி.பி., உதவியுடன் வெட்டி சாய்க்கப்பட்டன.

தனிநபர் வசதிக்காக, பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் கிராமவாசிகள் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கிராமவாசிகள், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, சட்டசபை வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது, 'தமிழ்நாட்டில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு அந்தந்த பகுதி மாவட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் எனவும், அனுமதி இன்றி மாநில மரமான பனை மரத்தை வெட்டுவது குற்றம்' எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சோழவரம் பகுதியில், 50 பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளதால், அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us