Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறுமிக்கு தொந்தரவு உறவினருக்கு '10 ஆண்டு'

சிறுமிக்கு தொந்தரவு உறவினருக்கு '10 ஆண்டு'

சிறுமிக்கு தொந்தரவு உறவினருக்கு '10 ஆண்டு'

சிறுமிக்கு தொந்தரவு உறவினருக்கு '10 ஆண்டு'

ADDED : ஜூன் 11, 2024 08:59 PM


Google News
சென்னை:புரசைவாக்கம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தந்தையுடன் இருவரும் வசித்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆக., 17ல், 15 வயதான சிறுமியை, அவரது உறவினர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியின் உறவினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், சிறுமியின் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

'மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 7 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us