Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

ADDED : செப் 02, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி:பணகுடி அருகே ஒரு வழிப்பாதையில் டூவீலர்கள் மோதிக்கொண்டதில் இருவர் பலியாயினர். ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அங்கு பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே கலந்தபனையூரை சேர்ந்தவர் ராகவன் 21. இவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணனும் 27, நேற்று முன்தினம் நள்ளிரவில் டூவீலரில் பணகுடியில் இருந்து வடலிவிளை நோக்கி சென்றனர்.

எதிரே ஒருவழிப் பாதையில் வடலிவிளை சுந்தரபாண்டியன் 35, டூவீலரில் வந்தார். இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ராகவன், சுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கண்ணன் காயமடைந்தார்.

அடிக்கடி விபத்துகள் நடப்பதால் அங்கு பாலம் அமைக்க கோரி நேற்று மாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us