/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை - திருச்செந்தூர் இடையே ரயில் சோதனை ஓட்டம்நெல்லை - திருச்செந்தூர் இடையே ரயில் சோதனை ஓட்டம்
நெல்லை - திருச்செந்தூர் இடையே ரயில் சோதனை ஓட்டம்
நெல்லை - திருச்செந்தூர் இடையே ரயில் சோதனை ஓட்டம்
நெல்லை - திருச்செந்தூர் இடையே ரயில் சோதனை ஓட்டம்
ADDED : ஜன 06, 2024 03:18 PM

திருநெல்வேலி: கனமழையால் சேதமடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இன்று ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
டிச.,17, 18 தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், திருச்செந்தூர் - நெல்லை இடையேயான ரயில்வே தண்டவாளங்கள் சேதம் அடைந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளம் வடிந்த பிறகு, திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணி, துரிதமாக நடந்து வந்தது. இந்தபணிகள் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து, தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையிலான குழுவினர் இந்த பாதையில் ரயில் இன்ஜீனை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.