ADDED : ஜன 31, 2024 01:40 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அம்பாசமுத்திரம் அருகே அனவன்குடியிருப்பில் நேற்று முன் தினம் இரவு மாரியப்பன் வீட்டின் தொழுவத்தில் நின்ற கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துள்ளது.
கன்று சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது சிறுத்தை தப்பியது. சிறுத்தை குட்டியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் கூண்டு அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.