Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கோவில் நிலத்தில் சர்ச் ஒற்றை காலில் நின்று போராட்டம்

கோவில் நிலத்தில் சர்ச் ஒற்றை காலில் நின்று போராட்டம்

கோவில் நிலத்தில் சர்ச் ஒற்றை காலில் நின்று போராட்டம்

கோவில் நிலத்தில் சர்ச் ஒற்றை காலில் நின்று போராட்டம்

ADDED : பிப் 06, 2024 03:13 AM


Google News
திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில், தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவில் நிலத்தில், சர்ச் கட்ட முயற்சிப்பதை கண்டித்து, ஹிந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி ஜங்ஷன் கருப்பந்துறையில் தாமிரபரணி கரையில் அழியாபதீஸ்வரர் கோவில் உள்ளது.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து சர்ச் கட்ட முயற்சித்தனர்.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் அறநிலையத்துறையோ, போலீசாரோ நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நேற்று, ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் தலைமையில், அந்த அமைப்பினர் கோவில் முன், ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஷ்வரன் பேச்சு நடத்தினார். நிலம் மீட்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us