Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ

UPDATED : செப் 24, 2025 07:30 AMADDED : செப் 24, 2025 02:50 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நிலப்பட்டா மாறுதலுக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பாஸ்கர் மனைவி விஜயா. இவர் தனது கணவரின் தந்தை அய்யங்கண்ணுவின் நிலத்தை, பாஸ்கர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்காக கூடங்குளம் வி.ஏ.ஓ., ஸ்டால்வின் ஜெயசீலன் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். பின்னர் ரூ.25 ஆயிரமாக குறைத்தும் கேட்டுள்ளார்.

இதனை தர விரும்பாத விஜயா, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி. மெஸ்கலரின் எஸ்கால் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கூடங்குளம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் கண்காணித்தனர். அப்போது விஜயா கொடுத்த ரூ.25 ஆயிரத்தை பெற்ற ஸ்டால்வின் ஜெயசீலனை 44, கையும் களவுமாக கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலைச் சேர்ந்த இவர், கடந்த 11 ஆண்டுகளாக கூடங்குளத்தில் வி.ஏ.ஓ ஆக பணியாற்றி வந்துள்ளார். அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us