Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கடந்தை கொட்டி சிறுவன் மரணம்

கடந்தை கொட்டி சிறுவன் மரணம்

கடந்தை கொட்டி சிறுவன் மரணம்

கடந்தை கொட்டி சிறுவன் மரணம்

ADDED : ஜூன் 30, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: களக்காடு அருகே தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, கடந்தை கொட்டியதில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாவடியில், வெங்கடேஷ் என்பவர் நேற்று முன்தினம் மாலை தனக்கு சொந்தமான தோட்டத்தில், தென்னை மட்டைகளை வெட்டி அகற்றினார்.

அப்போது, தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ கடந்தை வண்டுகள் கலைந்து, கீழே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கொட்டின.

இதில், வெங்கடேஷ் மகன் ஜீவானந்தம், 7, சிறுவன் நித்தின், 5, காயமடைந்தனர். இருவருக்கும் களக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரவு வீடு திரும்பினர்.

நேற்று காலை, ஜீவானந்தம் வெகுநேரமாக படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. எழுப்பியதில் ஜீவானந்தம் இறந்தது தெரிய வந்தது.

நித்தினை, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us