ADDED : மே 22, 2025 02:59 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் வணிக ஆய்வாளராக பணியாற்றுபவர் அரவிந்தன் 40.
இவர் இங்கு முதியோர்களுக்காக பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் வாகனத்தில் அமர்ந்தபடி ஒரு நபரிடம் குடிபோதையில் பேசியுள்ளார். அந்த வீடியோ வெளியானதால் நேற்று அவரது பணியில் வேறு நபர் நியமிக்கப்பட்டார். அவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்