Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ சாலையில் திரிந்த மாடுகள் அப்பாவியை காவு வாங்கின

சாலையில் திரிந்த மாடுகள் அப்பாவியை காவு வாங்கின

சாலையில் திரிந்த மாடுகள் அப்பாவியை காவு வாங்கின

சாலையில் திரிந்த மாடுகள் அப்பாவியை காவு வாங்கின

ADDED : ஜூன் 23, 2024 09:23 AM


Google News
திருநெல்வேலி, : தமிழகத்தில் சாலையில் திரியும் கால்நடைகளால் தொடர்ந்து விபத்து ஏற்படுவதும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்த வரிசையில், நேற்று திருநெல்வேலி நகர் பகுதியில், இரு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டு மோதியதில், சாலையில் டூ - வீலரில் சென்ற அப்பாவி கோர்ட் ஊழியர், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி, பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ், 58. திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் இளநிலை கட்டளை பணியாளராக பணிபுரிந்தார். நேற்று காலை, 8:00 மணியளவில் கோர்ட் சம்மன் கொடுக்கும் பணிக்காக மொபட்டில் திருநெல்வேலி வண்ணாரப் பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்றார்.

தெற்கு பைபாஸ் ரோடு சீரமைப்பு பணியால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இவர் டூ - வீலரில் சென்ற பகுதியில், சாலையில் திரிந்த இரு மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில், ஒரு மாடு, வேலாயுதராஜ் டூ - வீலர் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்ட அவர், அவ்வழியாக வந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பான 'சிசிடிவி' காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us