Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ ரூ.60 லட்சம் கள்ளநோட்டு 3 பேர் கைது

ரூ.60 லட்சம் கள்ளநோட்டு 3 பேர் கைது

ரூ.60 லட்சம் கள்ளநோட்டு 3 பேர் கைது

ரூ.60 லட்சம் கள்ளநோட்டு 3 பேர் கைது

ADDED : ஆக 07, 2024 12:52 AM


Google News
திருநெல்வேலி:திருநெல்வேலி - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில், பாணான்குளம் அருகே மூன்றடைப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற ஜீப்பை சோதனையிட்ட போது, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தன. அனைத்தும், கள்ள, 500 ரூபாய் நோட்டுகள்.

காரில் இருந்த சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த தங்கராஜ், 42, விஷ்ணு சங்கர், சிவகாசியை சேர்ந்த சீமைச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

டி.என்., 39 சி.எப். 5054 என்ற போலி எண் கொண்ட ஜீப் வாகனம், எட்டு அலைபேசிகள், அரிவாள், கத்தி, 1.13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பலின் பின்னணி குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us