ADDED : ஜூலை 13, 2024 08:16 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே ஜாதி ரீதியான மோதல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த எட்வர்ட் 25, தச்சநல்லுாரைச் சேர்ந்த பலவேசம் 27, இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டிருந்தனர். தாழையூத்து எஸ்.ஐ., அருண்ராஜா இருவரையும் கைது செய்தார்.