Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது

போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது

போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது

போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது

ADDED : ஜூன் 08, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
தேனி : ஆண்டிபட்டி டி.வி., ரெங்கநாதபுரம் லோகேஸ்குமார்24. தேனி சுக்குவாடன்பட்டியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார்.

நண்பர்கள் மோகன்ராஜ், லட்சுமி நாரயணன் ஆகியோருடன் டூவீலரில் நேருசிலை அருகே சென்றார். அப்போது, அவர்களது டூவீலர் மீது மோதுவது போன்று அருண் டூவீலரை ஓட்டினார். இதனால் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தேனி போலீஸ் ஸ்டேஷனிற்கு விசாரணைக்கு வந்திருந்தனர்.போலீஸ் ஸ்டேஷனிற்கு வெளியே காத்திருந்போது அருண் ஆயுதத்தால் லோகேஸ்குமாரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.

காயமடைந்த லோகேஸ்குமார் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் தேனி போலீசார் அருணை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us