Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

ADDED : மே 27, 2025 01:28 AM


Google News
பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் விவசாய கூலி முருகன் 55. பாண்டீஸ்வரி 45. தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

முருகன் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, காலை 10:00 மணிக்கு வீடு திரும்புவார். இந்நிலையில் திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோட்டில் வடுகபட்டி அருகே நடந்து சென்ற முருகன் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தென்கரை போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us