/உள்ளூர் செய்திகள்/தேனி/தாக்குதல் சுபாவத்துடன் வலம் வரும் காட்டு யானைகள் பொது மக்கள், தொழிலாளர்கள் கலக்கம்தாக்குதல் சுபாவத்துடன் வலம் வரும் காட்டு யானைகள் பொது மக்கள், தொழிலாளர்கள் கலக்கம்
தாக்குதல் சுபாவத்துடன் வலம் வரும் காட்டு யானைகள் பொது மக்கள், தொழிலாளர்கள் கலக்கம்
தாக்குதல் சுபாவத்துடன் வலம் வரும் காட்டு யானைகள் பொது மக்கள், தொழிலாளர்கள் கலக்கம்
தாக்குதல் சுபாவத்துடன் வலம் வரும் காட்டு யானைகள் பொது மக்கள், தொழிலாளர்கள் கலக்கம்

நிதியுதவி
இறந்த பால்ராஜின் குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கிய வனத்துறை அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவையும் ஏற்றது.
சாது
மூணாறு பகுதியில் காட்டு யானைகள் ஏராளம் உள்ள போதும் அவற்றில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். அந்த யானை தீவனத்தை தேடி ரோடு, குடியிருப்பு பகுதி ஆகியவற்றில் பகல், இரவு பாராமல் சுற்றித் திரிவது வழக்கம். மிகவும் சாதுவான படையப்பா மனிதர்களை தாக்குவதில்லை. மாறாக எதிர்பாராத வகையில் சிக்கும் வாகனங்களை விட்டு வைப்பதில்லை.
ஆபத்தான யானைகள்
சமீப காலமாக மூணாறு பகுதியில் ஒற்றை கொம்பன், கட்டை கொம்பன் என இரண்டு ஆண் காட்டு யானைகள் தாக்குதல் சுபாவத்துடன் வலம் வருகின்றன. மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள மைதானத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு வந்த ஒற்றை கொம்பன் அங்கு கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டவர்களை விரட்டியது.


