/உள்ளூர் செய்திகள்/தேனி/ துார்வாரப்படாத தாமரைக்குளம் கண்மாய்; நீர்நிலை மாசுபடும் அபாயம் துார்வாரப்படாத தாமரைக்குளம் கண்மாய்; நீர்நிலை மாசுபடும் அபாயம்
துார்வாரப்படாத தாமரைக்குளம் கண்மாய்; நீர்நிலை மாசுபடும் அபாயம்
துார்வாரப்படாத தாமரைக்குளம் கண்மாய்; நீர்நிலை மாசுபடும் அபாயம்
துார்வாரப்படாத தாமரைக்குளம் கண்மாய்; நீர்நிலை மாசுபடும் அபாயம்
மதகுகள் சீரமைக்க கோரிக்கை
முத்துச்சாமி, தலைவர், தாமரைக்குளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம்: தாமரைக்குளம் கண்மாயில் 150 மீட்டர் இடை வெளியில் அடுத்தடுத்து 3 மதகுகளும் சேதமடைந்துள்ளது. மனிதனுக்கு உடல் உறுப்புகளில் 'கண்கள்' எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு கண்மாய்க்கு மதகுகள் முக்கியம். மதகுகள் பழுதால் விவசாயத்திற்கு நீர் திறப்பின் போது சேதமடைந்த மதகுகளை தூக்கி இறக்க முடியவில்லை.
புறக்கணிக்கப்பட்ட கண்மாய்
பவுன்ராஜ், விவசாயி: கடந்த 5 ஆண்டுகளில் நீர்வளத்துறையினர் கண்மாய் பராமரிப்பு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். தாமரைப் பூக்கள் நிறைந்து அழகாக காட்சி அளித்த கண்மாயில் தற்போது தண்ணீரை உறிஞ்சும் ஆகாயத்தாமரை, ஊணான் செடிகள், கருவேலம் மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இவைகள் கண்மாயில் சிறிதளவு தண்ணீரையும் போட்டி போட்டு உறிஞ்சுகிறது. இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு கண்மாய் கரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த கண்மாயினை சப்-கலெக்டர் ரஜத்பீடன் பார்வையிட்டு நீர் பாசனத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்., என்றார். --