Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தமிழக தொழிலாளர் மூவர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தமிழக தொழிலாளர் மூவர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தமிழக தொழிலாளர் மூவர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தமிழக தொழிலாளர் மூவர் பலி

ADDED : அக் 03, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
கூடலுார்: கேரளா, இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் ஓட்டல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ஜெயராம் 38, கூடலுார் சுந்தரபாண்டியன் 34, மைக்கேல் 36 ஆகிய மூன்று தொழிலாளர்கள் மூச்சு திணறி பலியானார்கள்.

இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் இருந்து புளியன் மலை செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சீரமைப்பு பணி நடைபெற்றது. அங்குள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்துள்ளது. இதில் கம்பத்தை சேர்ந்த ஜெயராம், கூடலூரை சேர்ந்த சுந்தர பாண்டியன், மைக்கேல் ஈடுபட்டுள்ளனர். கழிவு நீர் தொட்டிக்குள் முதலில் ஜெயராம் இறங்கியுள்ளார். ஜெயராம் இறங்கி சிறிது நேரத்தில் சத்தம் ஏதும் வராததால் அவரை பார்க்க சுந்தர பாண்டியனும், மைக்கேலும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். மூவரும் தொட்டிக்குள் விஷ வாயு தாக்கி பலியானார்கள். தகவலின் பேரில் கட்டப்பனை தீயணைப்பு துறையினர் போராடி மூவரது உடல்களையும் மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us