/உள்ளூர் செய்திகள்/தேனி/ அதிகாரி கண்மாயில் நீர் தேங்காததால் ஆயிரம் ஏக்கர் தரிசான அவலம் கோத்தலுாத்து விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறிய பரிதாபம் அதிகாரி கண்மாயில் நீர் தேங்காததால் ஆயிரம் ஏக்கர் தரிசான அவலம் கோத்தலுாத்து விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறிய பரிதாபம்
அதிகாரி கண்மாயில் நீர் தேங்காததால் ஆயிரம் ஏக்கர் தரிசான அவலம் கோத்தலுாத்து விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறிய பரிதாபம்
அதிகாரி கண்மாயில் நீர் தேங்காததால் ஆயிரம் ஏக்கர் தரிசான அவலம் கோத்தலுாத்து விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறிய பரிதாபம்
அதிகாரி கண்மாயில் நீர் தேங்காததால் ஆயிரம் ஏக்கர் தரிசான அவலம் கோத்தலுாத்து விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறிய பரிதாபம்

மழைநீரை மடைமாற்றுவதால் பாதிப்பு
கபிலன், கன்னியப்பபிள்ளைபட்டி: கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் பாதிப்பின்றி இருபோகம் விவசாயத்தை தொடர முடியும். கண்மாய் நீரால் எரதிமக்காள்பட்டி, எம்.சுப்புலாபுரம், மறவபட்டி, கோத்தலூத்து, கொப்பையம்பட்டி, மொட்டனூத்து, ஆசாரிப்பட்டி, மணியாரம்பட்டி, மறவபட்டி, ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். கண்மாயின் நீர்வரத்து கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி உள்ளது. நாகலாறு ஓடையில் மழைக்காலத்தில் வரும் நீரை மடை மாற்றி வேறு கண்மாய்க்கு திருப்பி விடுகின்றனர். இதனால் அதிகாரி கண்மாய் பாதிப்படைகிறது. விவசாயம் பாதிப்பதால் அதனை சார்ந்துள்ள கால்நடை வளர்ப்பு தொழிலும் நசிவடைகிறது. இளைய தலைமுறையினர் பிழைப்புக்காக விவசாயத்தை கைவிட்டு வெளியூர் செல்கின்றனர்.
நீர் பற்றாக்குறையால் விவசாயம் கேள்விக்குறி
வி.காளிவேல், கோத்தலூத்து: நாகலாறு ஓடையில் இருந்து அதிகாரி கண்மாக்கு வர வேண்டிய நீர் கொத்தப்பட்டி புல்வெட்டி கண்மாய்க்கு செல்கிறது.