ADDED : மார் 22, 2025 04:46 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது.
தேனிமேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் ஆனந்த வேல் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார்.
கரூர் மாவட்ட ஆசிரியர் கல்விப்பயிற்சி நிறுவன முன்னாள் துணை முதல்வர் சேதுபதி தமிழ் இலக்கியங்கள் பற்றி பேசினார். உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் உள்ளிட்டோர் விழாவில்பங்கேற்றனர்.