எஸ்.பி., ஆபீஸ் முன் தற்கொலை முயற்சி
எஸ்.பி., ஆபீஸ் முன் தற்கொலை முயற்சி
எஸ்.பி., ஆபீஸ் முன் தற்கொலை முயற்சி
ADDED : செப் 02, 2025 05:34 AM
தேனி : சின்னமனுார் அழகாபுரி விவசாயி மூர்த்தி 40.
இவர் இதேப் பகுதியில் அவரது நிலத்தில் 2 ஏக்கரில் வாழை நடவு செய்திருந்தார். இவரின் உறவினர் வருஷநாட்டை சேர்ந்த மகேஸ்வரி, ' மூர்த்தி வாழை நடவு செய்த நிலம் தனக்கு சொந்தம் எனக்கூறி வாழையை உழவு செய்து அழித்து விட்டார்,' என மூர்த்தி ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நேற்று மூர்த்தி எஸ்.பி., அலுவலக நுழைவாயில் அருகே வந்தவர், ஒரு லிட்டர் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலை முயற்சித்தார். அவரை போலீசார் மீட்டு, தேனி அரசு ருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.